tamil business coach
உங்கள் காருக்கு நீங்கள் டிரைவராக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது முதலாளியாக இருக்க விரும்புகிறீர்களா? Read More
ஒரு சிறுவன், தன் தாய் மீன் வறுப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் மீனின் தலைப் பகுதியை வெட்டிய தாய், Read More
கடனுக்கு வாங்கினால் கூடுதல் விலையிலும், ரொக்கத்துக்கு கொள்முதல் செய்தால் குறைவான விலையிலும் பொருட்கள் கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே!
‘பிராண்டிங்’ என்பது பொருளுக்கு மட்டுமல்ல தொழில் முனைவருக்கும் அவசியம். அம்பானி என்றாலே அவரை நம்பி முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து விட்டது. Read More
தொழிலாளி, முதலாளி ஆக முடியுமா..? இக்கேள்வி பலருக்கும் எழும் முக்கியமான ஒன்று. வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும்.
வேலையை உதறிவிட்டுத் தொழில் தொடங்கலாமா… அல்லது வேலையில் இருந்து கொண்டே தொழில் தொடங்கலாமா? இது அடுத்த கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு என்ன விடை?
உங்களில் எத்தனை பேர் கிங்க் வால் குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவதைத் கூர்ந்து பார்த்திருக்கிறீர்கள்? அது எடுத்தவுடன் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவி விடாது. முதலில் தன் வாலை அடுத்த மரத்துக் கிளையில் சுற்றிக்கொண்டு, தாம் விழ மாட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த பிறகே அந்த மரத்திற்குத் தாவும். இதற்கு ‘பற்றி விடுதல்’ என்று பெயர்.
இதுபோல் ‘விட்டுப் பற்றுதல்’ என்பதும் உண்டு. நாம் +2 முடித்த பிறகு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அல்லவா? அப்பொழுது கல்லூரியில் சீட் கிடைத்தால் தான் நான் +2 முடிப்பேன் என்று அடம் பிடிக்க முடியுமா? இதேபோல் சில விஷயங்கள் கையை மீறி நடக்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில் ‘விட்டுப் பற்றுதல்’ சித்தாந்தம் தான் பொருத்தமாக இருக்கும்.
தொழிலைப் பொறுத்தவரையில் இரண்டும் சரியே. ஒரே வேறுபாடு என்னவென்றால் முன்னது பாதுகாப்பானது. பின்னது ‘த்ரில்’ லானது. அவ்வளவுதான். நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல், ஆற்றின் போக்கிலேயே போகும் இலை போல் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுவதும் ஒரு த்ரில் தானே !
தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு, பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை உதறுவதற்கு முன், மனதில் பல பயங்களும் ஐய ங்களும் எழக்கூடும்.
இந்த வினாக்களுக்கு விடை தேடுகிற அதே வேலையில் கீழே உள்ள 10 ஆலோசனைகளையும் மனதில் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பது என்பது நல்ல சிந்தனைதான். தமிழகத்தில் 7 கோடி பேர். இதில் 2 கோடி குழந்தைகள். இவர்களின் சென்னையில் மட்டும் குறைந்தது 25 லட்சம் பேர். இதில் வீட்டிலேயே கம்ப்யூட்டர் வைத்திருப்போர் இரண்டரை லட்சம் என்று கொண்டாலும், அதில் 2,500 பேர் கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். என்று ‘ரமணா’ படத்தில் வருவது போல புள்ளிவிவரம் எடுப்பது சிந்தனைக்கு சரி. இந்த சிந்தனைக்குத் தொழில் வடிவம் கொடுக்கும் நோக்கில் என். ஐ.ஐ.டி லெடா (NIITLeda), ஃபோர்த் ஆர் (Fourth R), ஐ.டி .கிட்ஸ் (IT Kids) எனப் பல நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை எல்லாமே தோல்வியுற்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மற்றொரு சான்று, அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஸ்கவுண்ட் கார்டுகள் ’ சில ஆண்டுகளுக்கு முன்னால் கிரெடிட் கார்டுகளை போல டிஸ்கவுண்ட் கார்டுகளையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. நீங்கள் ரூ100 கொடுத்து அந்தக் கார்டை விலைக்கு வாங்கினால், உங்கள் நகரில் உள்ள சுமார் 100 கடைகளில் எல்லாப் பொருள்களையும் 5 % முதல் 15% வரை தள்ளுபடியில் வாங்கலாம். கார்ட் விற்பவருக்கும் லாபம்… வாங்கியவருக்கு தள்ளுபடியில் லாபம்… கடைக்காரருக்கு கூடுதல் விற்பனையால் லாபம் என்ற இந்தச் சிந்தனை கேட்பதற்கு புதுமையாக, நல்ல லாபம் தருவது போன்று இருந்தது. ஆனால்,நடைமுறைப்படுத்தப்பட்ட போது பெரும் தோல்வியையே சந்தித்தது.
சரி… அப்படியானால் எந்தச் சிந்தனையை வெற்றித் தரக்கூடிய தொழிலாக மாற்ற முடியும்? மேலைநாட்டு நிர்வாக நெறிப்படி, எந்த ஒரு சிந்தனை உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறதோ, வேலைப்பளுவைக் குறைக்கிறதோ, நேரத்தை மிச்சப்படுத்துகிறதோ, வசதியை அதிகரித்து தருகிறதோ… அவை எல்லாம் தொழில் வாய்ப்புள்ள சிந்தனைகள் ஆகும்.
அதாவது வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், மைக்ரோ வேவ் ஓவன், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை பயன்பாட்டாளரின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வேலைப் பளுவையும் குறைகின்றன. இதனால் இவை வெற்றிபெற்றன. ஏர்கண்டிஷனர். ரிசார்ட், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவையெல்லாம் மனிதர்களின் வசதிகளை அதிகரித்தமையால் வெற்றி பெற்றன.
இந்த ரீதியில் நீங்களும் யோசித்தால் உங்களது சிந்தனையையும் தொழிலாக மாற்ற இயலும்.
_ இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker
ஒர் அரசன் தம் நாட்டில் புதிய நெடுஞ்சாலை ஒன்றை அமைத்தான். அந்த நெடுஞ்சாலையை பொதுமக்களுக்கு திறந்து விடுவதற்கு முன்பாக Read More