Blogs
அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது.
பிளாக் பஸ்டர் (BLOCK BUSTER) என்ற – வீடியோ கேசட்டை வாடகைக்கு விடும் நிறுவனம், மிகப் பிரபலமாக இருந்தது. அமெரிக்கா முழுவதும் 9 ஆயிரம் கடைகளை அந்நிறுவனம் நடத்தி வந்தது. அதனுடைய அப்போதைய விற்பனை வருவாய், ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும்.
அந்தச் சமயத்தில், வீடியோ கேசட்களுக்கு மாற்றாக, டி.வி.டி., (DVD) பிரபலமடையத் தொடங்கியிருந்தது. ஹேஸ்டிங்ஸ் (HASTINGS) என்பவரும், ரேன்டோல்ப் (RANDOLPH) என்பவரும் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் (NETFLIX) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, திரைப்படங்களை வீடியோ கேசட்டிற்கு மாற்றாக டி.வி.டி.யில் பதிவேற்றி, அவற்றை வீடுகளுக்கு கூரியர் மூலம் அனுப்பும் சேவையைத் தொடங்கினர். பிறகு திரைப்படங்களை ஆன்லைனிலேயே பதிவேற்றி, இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கினர்.
இவை நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கூட, போதுமான வருவாயை ஈட்டித் தரவில்லை. நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்திலேயே இயங்கி வந்தது.
இவர்கள் இருவரும் பிளாக் பஸ்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜான் ஆண்டியோகோ (JOHN ANTIOCO) வைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் 400 கோடி ரூபாயை முதலீடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பிளாக் பஸ்டர் நிறுவனம் அந்தத் தொகையை முதலீடு செய்தால், தங்கள் நிறுவனத்தின் வருமானத்தை பன்மடங்கு உயத்தி, லாபத்தை ஈட்டித் தருவதாகவும் உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால், ஜான் ஆண்டியோகோவோ அவர்களைப் பொருட்படுத்தவே இல்லை.
பிற்பாடு வீடியோ கேசட்டுகளின் சந்தை வீழ்ச்சி அடைந்தது. பிளாக் பஸ்டர் நிறுவனத்தால் நல்ல ஆன்லைன் தளத்தை உருவாக்க இயலவில்லை. எனவே, 2008 ஆம் ஆண்டு நொடிந்து போய் மூடப்பட்டது.
ஆனால் இன்றைக்கோ, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், இந்தத் துறையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை அடைந்து விட்டது. இந்நிறுவனத்தின் சென்ற ஆண்டு வருவாய் 3,00,000 கோடி ரூபாய் ஆகும். அதாவது பிளாக் பஸ்டர் நிறுவனம் 1997 இல் ஈட்டிய வருவாயை விட, ஆறு மடங்கு அதிகமாக சென்ற ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வருவாயைச் சம்பாதித்து இருக்கிறது.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய சக்சஸ் சீக்ரெட் என்னவென்றால், நம்மை நாடி ஒருவர் வரும் போது, அவர் வெற்றி பெறவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக, அவரைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதுதான்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai
சென்ற இதழில், சேமிக்க விரும்புபவர்கள், முதலில் ஹெல்த் இன்சூரன்ஸ், டேர்ம் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் ஆகியவற்றில் சேமிக்கத் தொடங்கலாம் என்று பார்த்தோம். அவை தவிர வேறு என்னென்ன முதலீடுகள் உள்ளன என்பதை இந்த இதழில் பார்ப்போம். Read More
சேமிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் ஆர்டரில் சேமிக்கத் தொடங்கலாம்.
உடல் நலக் குறைவாலோ /விபத்தாலோ திடீரென மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டால், பணத் தேவையைச் சமாளிப்பதற்கு உதவும் காப்பீடு இது. Read More
ஒரு பிச்சைக்காரன், ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு மண் ஓடு இருந்தது. நீண்ட நெடுங்காலமாக அதே ஆலய வாசலில்தான் அவன் அமர்ந்திருந்தான்.
அந்த ஆலயத்திற்குப் புதிதாக வந்த ஒரு பணக்காரர், வெளியே வருகிற போது இவனையும், இவனது மண் ஓட்டையும் பார்த்தார். காசு போடுவதற்காக கீழே குனிந்த அவர், மண் ஓட்டைப் பார்த்ததும் அரண்டு போனார்.
அந்தப் பிச்சைக்காரனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “எவ்வளவு ஆண்டுகளாக நீ பிச்சை எடுக்கிறாய் ?” என்று கேட்டார்.
“நாங்கள் மூன்று தலைமுறைகளாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றான்.
“வா ! காரில் ஏறு” என்றார்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனும் ஏறி அமர்ந்தான். அவனை அழைத்துக்கொண்டு தன்னுடைய நகைக் கடைக்கு சென்றார். அவனை ஓரமாக அமர வைத்துவிட்டு அந்த மண் ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் பதைபதைத்துப் போனான்.
“ஐயா ! இது எங்களுடைய பரம்பரைச் சொத்து. இதுதான் எங்களுக்கு வாழ்வாதாரமே…. இதை ஏன் சுரண்டுகிறீர்கள் ?” என்று கண்ணீர் விட்டான்.
“கொஞ்சம் பொறுமையாக இரு” என்று சொல்லிவிட்டு, முழுவதுமாக சுரண்டினார்.
என்ன ஆச்சரியம்… !அவர் சுரண்ட, சுரண்ட உள்ளே இருந்த தங்கப் பாத்திரம் கண்ணில் படத் தொடங்கியது. ஆம் ! ஏறக்குறைய ஒன்றரை கிலோ எடை கொண்ட தங்கப் பாத்திரம் அது. அந்தத் தங்கம் வெளியே தெரியாதபடி மண்ணால் முன்பு பூசப்பட்டிருந்திருக்கிறது. அவ்வளவு தான்.
அந்தத் தொழிலதிபர், பிச்சைக்காரனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த ஓட்டின் மதிப்பு, சுமார் ஒரு கோடி ரூபாய். மூன்று தலைமுறைகளாக இதன் மதிப்பே தெரியாமல் நீங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை வைத்துக்கொண்டு இனிமேலாவது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழத் தொடங்கு” என்று சொல்லி அனுப்பினார்.
நண்பர்களே ! மண் ஓடு என்பது ஒரு குறியீடு தான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்தத் தங்கப் பாத்திரம் மாதிரி ஏகப்பட்ட திறமைகள் குவிந்திருக்கின்றன. உங்களுக்கு சமைக்கத் தெரியும் என்றால் போதும். ரோட்டோரக் கடை நடத்துவதற்குப் பதிலாக, கேட்டரிங் தொழில் நடத்தி, கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு பொருளை விற்கத் தெரிந்திருந்தால் போதும்… அமேசான் மாதிரி லட்சம் கோடிகளில் வியாபாரம் செய்கிற நிறுவனத்தைக் கூட நடத்த முடியும்.
ஆம் ! நமது திறமையைக் கண்டறிந்து, அதை வணிக மயப்படுத்தினால், கார்ப்பரேட் நிறுவனமாக உயர்ந்து, கோடிகளைச் சம்பாதிக்கலாம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu
“என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்கிற பட்டியலோடு, உங்கள் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்” என்கிறார், உலகின் முன்னணி தன்முனைப்பு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், பிரையன் டிரேசி. (“NEVER START THE DAY WITHOUT A LIST”) Read More
உங்கள் வீட்டுச் செல்ல குழந்தைக்கு பேச்சு வரவில்லையா ?கையில் கிடைப்பதை எல்லாம் பிறர் மீது எறிகிற குணம் அதற்கு இருக்கிறதா ? தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எதையாவது செய்து கொண்டிருக்கிறதா ? Read More