December, 2022
‘டார்கெட் டேட்டா‘ (Target Data), ‘டேஷ் போர்ட் டேட்டா (Dash Board Data) – இந்த இரண்டு பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
ஒரு விறகுவெட்டி நாள்தோறும் 20 கிலோ எடையுள்ள மரத்தின் விறகுகளை வெட்டுவது வழக்கம்.
நாள் செல்லச் செல்ல அவன் வெட்டும் மரங்களின் அளவு குறையத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 15 கிலோ, 10 கிலோ, 5 கிலோ என சரிந்து கொண்டே வந்தது. Read More
முடிவுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கொள்கை ரீதியான முடிவுகள் (Policy Decisions). இரண்டாவது, அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் (Executing Decisions). உதாரணத்திற்கு, கார் வாங்குதல் என்பது கொள்கை முடிவு. எந்த மாடல் கார், என்ன விலையில், எப்போது வாங்க வேண்டும் என்பது செயப்படுத்துதல் தொடர்பான முடிவு.
கொள்கை ரீதியான முடிவுகளை வெற்றியாளர்கள் உடனுக்குடன் எடுக்க மாட்டார்கள். குறித்த காலத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்திற்குள், முடிவுகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் அவர்கள் முடிவை மேற்கொள்வார்கள்.
ஆனால், செயல்படுத்துதல் தொடர்பான முடிவுகளில், உடனுக்குடன் அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். அது மட்டுமல்ல… தனக்கு கீழ் பணியாற்றுபவர்கள் அந்த முடிவுகளை எதன் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்தால் உடனடியாக அந்தப் புகாரை யாரைக் கொண்டு, எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்? ஒரு பணியாளர் தொடர்ந்து ஒரு வாரம் பணிக்கு வரவில்லை என்றால் அவரது வேலைகளை எப்படி பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்? என்பதையெல்லாம் தமது நிறுவன மேலாளர்களுக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்துவிடுவார், ஒரு நல்ல பணிக்காரர்.
எப்போதும் பிரச்னைகளோடு வருகிற பணியாளர்களிடம் தீர்வுகளைச் சொல்லாமல், அவர்களையே முடிவுகளை எடுக்கப் பழக்குவதுதான் பணிக்காரர்களின் வழக்கம்.
-ராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை
பார்த்து வந்தனர். ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யாமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான். முதலாளிக்கு வந்ததே கோபம்… ‘இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவர் என்று நினைத்தார்.
அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார். அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு “எட்டாயிரம் ரூபாய் சார்”என்றான்.
உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து பதினாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் கொடுக்க இந்த ஃபேக்டரியை நடத்தவில்லை. நீ போகலாம்” என்றார்.
அவன் ஒரு நிமிடம் ‘திரு திரு‘ என முழித்துவிட்டு, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தான். மற்ற தொழிலாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.
முதலாளி மேலாளரைக் கூப்பிட்டு “இந்த மாதிரி ஆட்களை யார் வேலைக்குச் சேர்த்தது?” என்று கேட்டார். மேலாளர் பவ்யமாகச் சென்னார்: “அவன் டீ கொண்டு வந்த எதிர்கடைப் பையன்‘ என்று.
உடனுக்குடன் முடிவெடுக்கப் பழகிவிட்ட அந்த முதலாளி, தவறாக எடுத்த முடிவு இது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை. அவர் இந்த முடிவின் மூலம் சொல்ல நினைத்தது, “ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் ஒருவரை வேலையில் வைத்திருக்கக்கூடாது” என்பதுதான்.
எனவே, உடனடியாக, வேலை பார்ப்பவர்களுக்கெல்லாம் யூனிஃபார்மும், அடையாளஅட்டையும் தர உத்தரவிட்டு, திரும்பவும் தாம் இதுபோன்று தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆம்! வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடனுக்குடன் முடிவெடுப்பவர்கள்.
எனவே, நீங்களும் விரைவாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
_ இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil