fbpx
சாமர்த்திய சாதனை! A Story on Situation Handling

a story on situation handling
  • September 8, 2024

ஒருநாள் முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவேமக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் முன் நீட்டியது. மலர்கள்மணம் தரும் பொருட்கள்தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களும் தலைக்கு இரண்டு மூன்றாக மலரை அள்ளிக் கொண்டனர்.அடுத்துஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்த சித்தானந்தர் மீதமுள்ளவற்றை சீடர்கள் பக்கம் நகர்த்தினார்.

சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டு பாராட்டினர். அடுத்துகுடிசை முன் நின்ற ஏழைப் பெண்ணொருத்தி ஞானியை வரவேற்றுதட்டு நிறைய திராட்சைகளை அளித்தாள். ஞானி அதில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக்கொண்டேஇருந்தனர். மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் ஏமாற்றமடைந்தனர்.தங்கள் வழியே அவர்கள் தொடர்ந்து நடக்கத் தொடங்கினர்.சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “நீங்கள் எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே.அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய்இருந்தது. எனவேநான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்” என்றார் குரு.

உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கசுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா… இது நீதியாகுமாஎன்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்குகொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால்இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால்இந்தப் பழம் புளிக்கிறதுஎன்று நீங்கள் சாப்பிடும்போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை” என்று சொன்னார் முனிவர்.எவருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.

இதுதான் தலைமைக் குணம். ஒரு தொழிலில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால்ஊழியர்களையும்வாடிக்கையாளர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டியிருக்கும். இருவரது தயவும் தேவை. அதேசமயம்யாரொருவர் மனமும் புண்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அதற்கு இதுபோன்ற சாமர்த்தியமான அணுகுமுறைகள் எப்போதுமே தேவை.வாகனம் ஓட்டும்போதுடிராஃபிக்கை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். டாக்டர் ஆக விரும்பினால்அதனால் ஏற்படும் கஷ்டங்களை ஐந்தாண்டுகளுக்கு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். சேல்ஸ்மேனாக விரும்பினால்பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டுதான் ஆகவேண்டும். எல்லா நல்ல விஷயங்களிலும் ஒரு ப்ளஸ்ஸூம்அதற்கேற்ற மைனஸ்களும் இருக்கத்தான் செய்யும். பின்னடைவுகளையும் தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும். பிரச்னைகளைக் கணித்து அதற்கேற்ப சாதுர்யமாக நடந்து கொள்ளும்போதுதான் வெற்றிசாத்தியமாகிறது.

Comments are closed.